முள்ளங்கி சப்பாத்தி/ mooli paratha
செப்டம்பர் 9, 2009 at 1:48 பிற்பகல் மறுமொழியவும்
தேவையான பொருட்கள் – 2 பேருக்கு
முள்ளங்கி – 3
பச்சை மிளகாய் – 2 சிறிதாக நறுக்கியது
கொத்துமல்லி தழை – சிறிதளவு நறுக்கியது
மிளகாய் தூள் – 2 தே. கரண்டி
உப்பு தேவையான அளவு
எண்ணை சிறிதளவு
கோதுமை மாவு – 2 கப்
செய்முறை
முதலில் கோதுமை மாவை உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
(சப்பாத்தி மிருதுவாக இருக்க வெந்நீர் உபயோகியுங்கள்.. சிறிதளவு நெய்யும் சேர்க்கலாம்)
முள்ளங்கிகளை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
முள்ளங்கித்துருவலைப் பிழிந்து அதிலுள்ள நீரை நீக்கவும்.
(உங்களுக்கு விருப்பமானால் இந்த நீரை உபயோகித்தும் சப்பாத்தி மாவு பிசையலாம், பிசைந்த மாவை 1 மணி நேரம் ஊரவிடுவது சப்பாத்தியை மிருதுவாக்கும்)
ஒரு பாத்திரத்தில் இந்தத் துருவல், பச்சை மிளகாய் இவற்றறப் போட்டு நன்றாக வதக்கவும் பின்பு மிளகாய் தூள், உப்பு, கொத்துமல்லி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
சப்பாத்தி மாவை பெரிய உருண்டைகளாக உருட்டவும்.
வட்டமாக சப்பாத்தி இட்டு அதில் இரண்டு தே.கரண்டி முள்ளங்கி கலவையை வைத்து உருட்டி கணமான சப்பாத்தியாக இடவும்.
சிறிது எண்னை விட்டு சப்பாத்திகளை சுட்டெடுக்கவும்.
தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.
Entry filed under: சிற்றுண்டி வகை. Tags: சப்பாத்தி, சமையல் குறிப்பு, samayal kurippu.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed