புதினா சாதம் /Puthina Rice / Mint rice
ஏப்ரல் 16, 2013 at 2:19 பிப 3 பின்னூட்டங்கள்
தேவையான பொருட்கள்
———————————
- அரைக்க
————————
புதினா தழை – 1 கப்
இஞ்சி, பூண்டு விழுது – 3 தே. கரண்டி
தேங்காய் துருவல் – 3 தே. கரண்டி
பச்சை மிளகாய் – 5
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை விழுதாக அரைக்கவும்.
2.பாசுமதி அரிசி – 2 கப்
வேகவைத்து ஆறவைக்கவும்.
தாளிப்பு
————
ஏலக்காய்,லவங்கம்,நட்சத்திர சோம்பு – 3
முந்திரி வறுத்தது – 10
வெங்காயம் – 1 (நீள வாக்கில் நறுக்கியது)
எண்ணை தேவையான அளவு
செய்முறை
————–
*அடி கனமான பாத்திரத்தை அடுப்பிலேற்றி, அதில் சிறிதளவு எண்ணை ஊற்றி, காய்ந்ததும் ஏலம், லவங்கம், நட்சத்திர சோம்பு போட்டு தாளிக்கவும்.
*அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
*வெங்காயம் வதங்கியதும் அரைத்த புதினா விழுதை சேர்த்து வதக்கவும்.
*எண்ணை பிரிந்து வரும் சமயம் முந்திரி சேர்த்து அடுப்பை அனைக்கவும்.
*வேகவைத்த பாசுமதி அரிசியில் இந்த கலவையை கொட்டி கலக்கவும்.
*அப்பளம், தயிர்-வெங்காயம்-தக்காளி பச்சடியுடன் பரிமாரவும்.
Entry filed under: சாத வகைகள். Tags: புதினா சாதம், Mint rice.
3 பின்னூட்டங்கள் Add your own
சே.குமார் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1. திண்டுக்கல் தனபாலன் | 9:06 பிப இல் ஏப்ரல் 16, 2013
புதினா தழைகளை மட்டும் வைத்து சட்னி செய்வார்கள்… இது போல் செய்ததில்லை…
செய்முறை குறிப்புக்கு நன்றி…
2. சே.குமார் | 3:23 பிப இல் செப்ரெம்பர் 2, 2013
வணக்கம் சகோதரி….
வலைச்சரத்தில் தங்களைப் பற்றி தெரிவித்துள்ளேன்… நேரமிருப்பின் கீழிருக்கும் இணைப்பின் வழியாக வலைச்சரம் வந்து பாருங்கள்…
நன்றி…
http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_3.html
3. திண்டுக்கல் தனபாலன் | 9:59 பிப இல் செப்ரெம்பர் 2, 2013
வணக்கம்…
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_3.html) சென்று பார்க்கவும்… நன்றி…